Wednesday 24th of April 2024 09:54:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் ஒரே நாளில் 15,400 பேருக்கு தொற்று: மொத்த தொற்று 4 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் ஒரே நாளில் 15,400 பேருக்கு தொற்று: மொத்த தொற்று 4 இலட்சத்தை கடந்தது!


கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 400 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவின் நாளாந்த கொரோனா தொற்று நிலைகளில் அதிகூடிய தொற்று பதிவாகிய நாளாக கடந்த 24 மணிநேரம் அமைந்துள்ளது.

இன்று (ஜூன்-21) காலை 8.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சால் வெளியிட்ப்பட் கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 400 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 306 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 56 ஆயிரத்து 845 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 704 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புது டெல்லியில் 2 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 ஆயிரத்து 746 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 639 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு இலட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE