Friday 29th of March 2024 04:08:06 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் ஆறாவது நாளாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் ஆறாவது நாளாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் மொத்த தொற்று 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட நாளாந்த கொரோனா அறிக்கையின் அடிப்படையில் இன்று 2 ஆயிரத்த 710 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இன்று ஆறாவது நாளாகவும் இரண்டாயிரத்தை கடந்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று 37 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 794 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்றும் 1487 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து இதுவரை சென்னையில் மட்டும் 42 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 34 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 27 ஆயிரத்து 178 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE