தமிழ்நாட்டில் தொடர்ந்து 7வது நாளாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூன்-23) 2 ஆயிரத்து 516 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 39 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 833 ஆக உயர்வடைந்துள்ளது.
தொடர்ந்தும் சென்னையில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றும் ஆயிரத்து 380 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 28 ஆயிரத்து 428 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை