Wednesday 24th of April 2024 07:23:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா!

சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா!


தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா குறித்த அச்சம் சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே தங்கியுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நேர்மறை பாதமிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவுக்கு கொரோனா குறித்தஅச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவல் அறிந்ததும் சமந்தாவின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரியவரும் அதேவேளை, சமந்தாவின் ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE