இந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதன் மூலம் இதுவரையான் தொற்று பதிவுகளின் அடிப்படையில் அதிகூடிய தொற்று ஏற்பட்டுள்ள நாளாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 922 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூன்-25) காலை 8.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சால் வெளியிட்ப்பட் கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 922 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 418 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக புது டெல்லியில் கொரோனா தொற்றாள்களது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகிறது. 3 ஆயிரத்து 788 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 70 ஆயிரத்து 390 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளனர்.
இவ்வாறு தமிழ்நாட்டில் 67 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 866 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 736 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29001 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு இலட்சத்து 71 ஆயிரத்து 697 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி