கொழும்பு கிருலப்பனை பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ அதிகாரியுடைய துப்பாக்கி இயங்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தற்கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.