தமிழ்நாட்டில் என்றும் இல்லாதளவுக்கு அதிகளவான கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த தொற்று 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து எட்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று முதன் முறையாக மூவாயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.
அந்தவகையில் இன்று (ஜூன்25) தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 509 புதிய தொற்றாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 45 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 911 ஆக உயர்வடைந்துள்ளது.
தொடர்ந்தும் சென்னையில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றும் ஆயிரத்து 834 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 39 ஆயிரத்து 999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 30 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை