Friday 29th of March 2024 04:27:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
16 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது!

16 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது!


கொழும்பு தெஹிவளை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் 16 மில்லியனுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் பேதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள ஹெரோயின் வியாபாரியான மர்வின் ஜனா என்பவருடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் தெஹிவளை பகுதியில் வைத்து 1.28 கிலோ கிராம் ஹெரோ போதைப் பெருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபாய் எனத் தெரவிக்கப்படுகிறது.

இதேவேளை, தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஹெரோயின் வகை போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 650 கிராம் ஹெரோயின் வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 6.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE