Thursday 25th of April 2024 07:29:06 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடிக்குள் தமிழ்நாடு: 75 ஆயிரத்தை நெருங்கியது தொற்று எண்ணிக்கை!

கொரோனாவின் பிடிக்குள் தமிழ்நாடு: 75 ஆயிரத்தை நெருங்கியது தொற்று எண்ணிக்கை!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் அதிகூடிய தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சால் சற்று முன்னதாக வெளியிடப்பட்ட நாளாந்த கொரோனா அறிக்கையின் அடிப்படையில் இன்று ஜூன்-26 3 ஆயிரத்து 645 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையான நாளாந்த கொரோனா தொற்றில் அதிகூடிய தொற்று உறுதி செய்யப்பட்ட நாளாக இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 46 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 947 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் சென்னையில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றும் ஆயிரத்து 956 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 32 ஆயிரத்து 305 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE