இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று பதிவாகியுள்ளதன் மூலம் இதுவரையான் தொற்று பதிவுகளின் அடிப்படையில் அதிகூடிய தொற்று ஏற்பட்டுள்ள நாளாக பதிவாகியுள்ளது.
காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 552 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், 384 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்து ஐந்து இலட்சத்து எட்டாயிரத்து 953 ஆக அதிகரித்துள்து.
கடந்த 24 மணிநேரத்தில் 384 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக புது டெல்லியில் கொரோனா தொற்றாள்களது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகிறது. 2 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 ஆயிரத்து 240 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாட்டில் 74 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 957 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 772 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு இலட்சத்து 95 ஆயிரத்து 881 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி