சீனாவின் தலைநகா் பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அண்மைக்காலத்தில் பரவி வரும் நிலையில் அங்கு இதுவரை 83 இலட்சம் பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.
கடந்த ஜூன் 11 ஆம் திகதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை இந்தச் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
பரிசோதிக்கப்பட்டவா்களில் சுமார் 7.69 மில்லியன் பேரின் முடிவுகள் இதுவரை கிடைத்துள்ளதாக பீஜிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 11 ஆம் திகதி 40 ஆயிரம் பேருக்கு சோதனைகள் இடம்பெற்றன. தொடா்ந்து தினசரி சோதனைகள் 4 இலட்சத்து 58 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா