கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிபுரம் கிராமத்தில் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று(29) பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபிட்சமான நோக்கு' எனும் எண்ணக்கருவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வின் வழிகாட்டலில் 'உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்' எனும் திட்டத்திற்கமைய 'கிராமத்திக்கு ஒரு வீடு' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள காஞ்சிபுரம் கிராமத்தில் ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இன்று (29)பகல் 12 மணிக்கு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கண்டாவளைப் பிரதேச செயலர் ரீ. பிருந்தாகரன் அவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி