தமிழ்நாட்டில் ஐந்தாவது நாளாக இன்றும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட புதிய தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதிகூடிய உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்றுமுன்னதாக வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று புதிதாக 3 ஆயிரத்துமு 949 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 86 ஆயிரத்து 224 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் இதுவரையான நாளாந்த உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பாக இன்றைய தினம் 61 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 141 ஆக உயர்வடைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 167 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 55 ஆயிரத்து 969 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதுவரை 47 ஆயிரத்து 749 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 37 ஆயிரத்து 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை