கிழக்கு லடாகின் கன்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீனப் படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதன் தொடராக இன்று டிக்டொக் உட்பட்ட 59 சீன செயலிகளுக்கு (APP) இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் கேம் ஸ்கானர், க்ளீன் மாஸ்டர், வீ-சட் உட்பட்ட செயலிகளும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருகின்றார்.