Wednesday 24th of April 2024 02:34:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரதமரைச் சந்தித்து மாலைதீவு  உயர் ஸ்தானிகர் பேச்சு!

பிரதமரைச் சந்தித்து மாலைதீவு உயர் ஸ்தானிகர் பேச்சு!


பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

கோவிட் - 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாலைத்தீவில் ஹோட்டல் துறையில் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15,000-20,000க்கும் இடையிலானோர் மாலைத்தீவில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE