Saturday 20th of April 2024 10:30:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 18 நாடுகளுக்கு  பயணத் தடை விதித்தது ஜப்பான்!

மேலும் 18 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது ஜப்பான்!


கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு அங்கமாக மேலும் 18 நாடுகளுக்கான பயணத் தடையை ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜூலை-01 முதல் புதிய பயணத் தடை அமுலுக்கு வருவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான காரணங்கள் தவிர்த்து பிற தேவைகளுக்கான பயணத் தடை தொடரும் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

புதிய நாடுகளுடன் சோ்த்து இதுவரை 129 நாடுகளுக்கு ஜப்பான் பயணத் தடை விதித்துள்ளது.

ஜப்பானில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், உலகின் பல நாடுகளில் தொற்று நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 18 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டதுடன். 972 பேர் உயிரிழந்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE