Tuesday 23rd of April 2024 08:08:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 33 பேர் தப்பித்துள்ளனர்!

கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 33 பேர் தப்பித்துள்ளனர்!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 33 பேர் இன்று குணடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது வரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களது எண்ணிக்கை 1711 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களில் இதுவரை 836 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களது எண்ணிக்கை 2042 ஆக உள்ளது. அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE