முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் இன்றும் முகக் கவசங்கள் அணியாது நடமாடிய 1441 பேர் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கத.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை