உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மேலும் 150 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று (ஜூன்-30) அழைத்து வரப்பட்ட இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் கட்டடுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), மலேசியா, இலங்கை