இலங்கையில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2047 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஓமான் நாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1711 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 322 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை