Saturday 20th of April 2024 06:45:38 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3943 புதிய தொற்று: 90 ஆயிரத்தை கடந்தது மொத்த தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 3943 புதிய தொற்று: 90 ஆயிரத்தை கடந்தது மொத்த தொற்று!


தமிழ்நாட்டில் இன்று 6வது நாளாக நாலாயிரத்தை கடந்த புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று 90 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்றுமுன்னதாக வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று புதிதாக 3 ஆயிரத்துமு 943 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இதுவரையான நாளாந்த உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பாக இன்றைய தினம் 60 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1201 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 393 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 58 ஆயிரத்து 327 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE