திருகோணமலை தம்பலகாமம் 99ஆம் கட்டை சந்தியில் இன்று (ஜூன்-30) இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாரென தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் படைச் சிப்பாயக பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.
இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதுண்டதில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த கடற்படை சிப்பாயின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நாளைய தினம்(ஜூலை-1) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை