மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்துடன், முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து செட்டிகுளம் துடரிக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மௌலவி தனது முச்சக்கவண்டியில் செட்டிகுளம் பகுதியில் இருந்து துடரிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியை சேர்ந்த சகீது என்று அழைக்கப்படும் மௌலவி ஒருவர் இறந்துள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா