Wednesday 24th of April 2024 07:09:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
சட்டவிரோத மின்சார இணைப்பு பெற்ற 1937 பேர் கைது: 6 கோடி அபராதம் அறவீடு!

சட்டவிரோத மின்சார இணைப்பு பெற்ற 1937 பேர் கைது: 6 கோடி அபராதம் அறவீடு!


சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பினை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1937 பேர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையான ஒரு வருட காலப்பகுதியில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்றுக் கொண்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து 1937 பேர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராதத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால், விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பல்வேறு நபர்களால் ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் போது ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர் வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE