Thursday 18th of April 2024 11:45:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டும்; ஜே.எம்.லாஹிர்

பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டும்; ஜே.எம்.லாஹிர்


நாட்டில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஏற்படுத்திய கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். தோப்பூர் பகுதியில் நேற்று (30) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: சமூகத்தின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தற்போதைய கட்சியின் தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். அத்தோடு இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் முஸ்லிம் சமூகம் அளிக்கின்ற வாக்குகள் ஜனாசாவை எரிப்பதிலிருந்தும், பள்ளிவாயல்களை தாக்குவதிலிருந்தும் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான வாக்குகளாக அமைய வேண்டும். இந்த பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டியதோடு, பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்படல் வேண்டும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குவீதம் அதிகரிக்கப்படுவதோடு சனத்தொகையும் முஸ்லிம் மக்களுடையது அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு ஆசனங்கள் பெறப்படுவது உறுதியாகவுள்ளது என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE