Thursday 18th of April 2024 06:32:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
அனைத்து மாவட்டங்களுக்குமான  வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணி பூா்த்தி!

அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணி பூா்த்தி!


அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளாா்.

அவை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவா் மேலும் குறிப்பிட்டாா். அச்சகத் திணைக்களத்தின் தோ்தல் தொடா்பான இதர பணிகளும் விரைவில் நிறைவடையும் எனவும் அவா் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பொதுத் தேர்தலுக்கான கடமைகளில் அரச அச்சகத் திணைக்களம் திறம்பட ஈடுபட்டுள்ளதாகவும் லியனகே சுட்டிக்காட்டினாா்.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் முன்னைய தோ்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தோ்தலுக்கான அச்சிடும் செயன்முறைகளுக்கு அதிக நேரம் எடுத்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஜூன் 6 ஆம் திகதி தொடங்கியது. சுகாதார அச்சுறுத்தல் உள்ளதாகக் கருதப்பட்டவா்கள் தவிர ஏனைய முழு ஊழியர்களும் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டனர். வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதைத் தவிர, அரச அச்சகத்திற்கு இன்னும் பல கடமைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே, சிறப்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை திணைக்களம் நியமித்துள்ளது எனவும் அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளாா்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE