மேடை நாடகங்கள் மற்றும் அரங்க செயற்பாடுகளை ஜூலை 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் நிகழ்வு அரங்கின் அல்லது நிகழ்விடத்தில் மொத்த பங்கேற்பாளா் தொகை மதிப்பீட்டில் 50 வீதம் வரையான பாா்வையாளா்களுடன் அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், சுகாதார வழிகாட்டல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க முன்வைத்துள்ளார்.