இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை-1) புதிதாக இருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2049 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மேலும் 37 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் 290 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை