Thursday 28th of March 2024 12:10:48 PM GMT

LANGUAGE - TAMIL
கோட்டாபய ராஜபக்சே
கிழக்கு தொல்லியல் செயலணி: தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க கோட்டா இணக்கம்!

கிழக்கு தொல்லியல் செயலணி: தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க கோட்டா இணக்கம்!


கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் இரண்டு பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இணங்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே மேற்படி இணக்கத்தைத் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நிபுணர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE