Wednesday 24th of April 2024 11:55:56 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 இலட்சத்தை கடந்தது: உயிரிழப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 இலட்சத்தை கடந்தது: உயிரிழப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது!


இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் 20 ஆயிரம் புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று ஆறு இலட்சத்தை கடந்துள்ளது.

காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 148 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 434 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்து.

கடந்த 24 மணிநேரத்தில் 434 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 94 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1264 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புது டெல்லியில் கொரோனா தொற்றாள்களது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகிறது. 2 ஆயிரத்து 803 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 89 ஆயிரத்து 802 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 3 இலட்சத்து 59 ஆயிரத்து 859 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE