இலங்கை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிரப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.