Friday 19th of April 2024 03:24:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாளில் என்றுமில்லாத புதிய உச்சம்: தமிழ்நாட்டில் 1 இலட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று!

ஒரே நாளில் என்றுமில்லாத புதிய உச்சம்: தமிழ்நாட்டில் 1 இலட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் அதிகூடிய தொற்றாக 4 ஆயிரத்தை கடந்த புதிய தொற்றுகள் இனம் காணப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று (ஜூலை-2) புதிதாக ஆயிரத்துமு 343 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 57 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1321 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 27 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 62 ஆயிரத்து 598 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE