பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பான விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முழுமையாக கைவிட இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக துறைமுகப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று சந்திப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்ததையடுத்து நேற்றையதின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதன்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பளுதூக்கிகளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தமது பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிற்சங்கம் தீர்மானிததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு