Thursday 25th of April 2024 08:16:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு!

2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு!


2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று மாலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, உப்புல் தரங்க மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் முன்னாள் முன்னணி வீரர் மகேல ஜெயவர்த்தனவும் அழைக்கப்பட்டிருந்து பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை குறித்த குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE