முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிக் குழு விசாரணை முடித்து சற்று முன்னர் வெளியேறியுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் இன்று (ஜூலை-3) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இதன்போது அவர்கள் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சுமார் 4 மணி நேர வாக்கு மூலம் ஒன்றை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வாக்குமூலம் பெறச் சென்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு அமையவே குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, கொழும்பு