தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்று ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஜூலை-3) புதிதாக 4 ஆயிரத்து 329 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 1 இலட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 64 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1385 ஆக உயர்வடைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 82 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 64 ஆயிரத்து 689 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதுவரை 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை