அமெரிக்காவில் தொடா்ச்சியாக நேற்று மூன்றாவது நாளாகவும் 50 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மிக அதிகளவாக 57 ஆயிரத்து 497 போ் தொற்றுக்குள்ளாகிப் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவில் கடந்த 9 நாட்களில் 7 நாட்கள் தினசரி எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கைகளை முறியடிக்கும் வகையில் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
புதிய நோயாளா்களுடன் இன்று காலை வரையான தரவுகளில் பிரகாரம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28 இலட்சத்து 90 ஆயிரத்து 588 ஆக உயா்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 101 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 12 இலட்சத்து 35 ஆயிரத்து 488 போ் தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். 15 இலட்சத்து 23 ஆயிரம் போ் மருத்துவமனைகளில் கிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 8,732 போ் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பல மாகாணங்களில் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. இதனால் சுகாதார சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.