வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 152 பேர் இன்றயதினம் விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள்அரசினால்முன்னெடுக்கப்பட்டிருந்தது .
அந்தவகையில் கடந்தமாதம் 19 ஆம் திகதி டுபாய், பிரித்தானியா, போன்ற நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 150 ற்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்றயதினம் அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த முகாமிற்கு அழைத்துவரப்பட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று பீடிக்கப்பட்டிருந்தமை கடந்தமாதம் உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா