தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1450 ஆக உயர்வடைந்துள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஜூலை-4) புதிதாக 4 ஆயிரத்து 280 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 1 இலட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 65 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1450 ஆக உயர்வடைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1 ஆயிரத்து 842 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 66 ஆயிரத்து 538 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதுவரை 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை