Friday 19th of April 2024 02:04:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி அரசியலில் இருந்து விலக மைத்திரி முடிவு!

பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி அரசியலில் இருந்து விலக மைத்திரி முடிவு!


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிலர் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை. எதிர்காலத்தில் கட்சியின் ஆலோசகராக தான் செயற்பட்டு இளைஞர் பரம்பரைக்கு கட்சியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு கல்வியறிவு மிக்க புதிய சிந்தனைகளை உடைய இளைஞர்களுக்கு சுதந்திர கட்சியை பாரப்படுத்தவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: மைத்திரிபால சிறிசேன, இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE