Thursday 28th of March 2024 02:06:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை அகதிகள் தப்பி வரலாமென்ற அச்சத்தால்  வடக்கு கடற்பரப்பில் கடற்படை தீவிர கண்காணிப்பு!

இலங்கை அகதிகள் தப்பி வரலாமென்ற அச்சத்தால் வடக்கு கடற்பரப்பில் கடற்படை தீவிர கண்காணிப்பு!


தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தீவிரமாகிவரும் நிலையில் அகதிகளாக சென்றவா்கள் அங்கிருந்து தப்பி வட பகுதிக்குள் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து அகதிகள் தப்பி வந்து இரகசியமாக சமூகத்தில் ஒன்றிணைந்தால் சமூகத்துக்குள் தொற்று நோய் பரவலாம் என சுகாதாரத் துறையினா் எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், பொலிஸார் மற்றும் கிராமசேவையாளர்களுக்கு இது குறித்து எச்சரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை காரணமாக அகதிகள் சிலா் இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் மீன்பிடி படகுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையக்கூடும், என்று வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் தங்கியிருந்த வேலணையைச் சோ்ந்த ஒருவா் இவ்வாறு தப்பி வேலைணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அந்த நபா் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE