சீனாவில் பன்றிகளிடையே பரவிவரும் G-4 வைரஸ் புதிய வகை அல்ல. அது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டில் கண்டறியப் பட்ட வைரஸ் என சீனா தெரிவித்துள்ளது.
இது பன்றிகளிடம் இருந்து மனிதருக்கோ அல்லது ஏனைய விலங்குகளுக்கோ இலகுவில் தொற்றாது என்றும் சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
சீனாவின் விவசாய மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சு நேற்று சனிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இத்தகவல் ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்பில் உலக சுகாதாரத் தாபனத்தால் 2011-ஆம் ஆண்டு தீவிரமாகக் கண்காணிக்கப் பட்ட ஒன்று என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் பன்றிகளிடம் புதிய வைகை வைரஸ் பரவி வருகிறது. இதுவும் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது கவலை வெளியிடப்பட்டிருந்தது.
இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள தேவையான நோயெதிர்ப்புச் சக்தி இருக்காது. இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை என்றாலும் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே பன்றிகளிடையே பரவிவரும் G-4 வைரஸ் புதிய வகை அல்ல. இது பன்றிகளிடம் இருந்து மனிதருக்கோ அல்லது ஏனைய விலங்குகளுக்கோ இலகுவில் தொற்றாது என்றும் சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.