கொழும்பு வெள்ளவத்தை டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த தீயணைப்பு வீரர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் கல்கிசை-தெகிவளை மாநகரசபையின் ஒரு தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.