Friday 19th of April 2024 04:49:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
பூநகரியில் இன்று மற்றுமொரு விபத்து இன்னொரு உயிரை பறித்தது!

பூநகரியில் இன்று மற்றுமொரு விபத்து இன்னொரு உயிரை பறித்தது!


கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் குறித்த விபத்தில் தீக்கிரையாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் தம்பிராய் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோதுண்ட குறித்த முச்சக்கர மோட்டார் வாகனம் தீக்கிரையானது. அத்துடன் அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இன்று காலை டம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE