Friday 19th of April 2024 02:23:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆபிரிக்க நாடுகளில் சிக்கியிருந்த 230 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஆபிரிக்க நாடுகளில் சிக்கியிருந்த 230 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


ஆபிரிக்க நாடுகளில் தொழில் நிமித்தமாக சென்றிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 230 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் பணிபுரிந்து வந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் தவித்த இலங்கையர்களே இவ்வாறு இன்று (ஜூலை-6) அதிகாலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

தொழிலுக்காக சென்று எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இவர்கள் விசேட போக்குவரத்து சேவையின் மூலம் அபாபா நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1710 இலக்க விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுதிரும்பிய அனைவரும் விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE