இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதல் 2-ம் கட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 15ம் திகதி முதல் 105 நாட்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் தொற்று நீக்க செயற்பாடுகள் கடந்த வாரம் முதல் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து இன்று முதல் 2-ம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் தரம் 5, 11 மற்றும் 13 மாணவர்கள் பாடசாலைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
13 ஆம், 11 ஆம் தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் காலை 7.30 க்கு ஆரம்பமாகி மாலை 3.30 வரை முன்னெடுக்கப்படுகின்றது.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை 3-ம் கட்டமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4-ம் கட்டமாக, 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.