கொங்கோவில் இட்டுரி மாகாண முன்னாள் துணைத் தலைவர் மற்றும் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பயணம் செய்த காரை இலக்குவைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இட்டுரி மாகாணம் - டிஜுஜு நகரின் மடிடி கிராமத்தில் காட்டுப் பகுதி ஊடாக காா் சென்றுகொண்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த கிளா்ச்சியாளர்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா்.
இந்தத் தாக்குதலில் அந்த காரில் இருந்த இட்டுரி மாகாண முன்னாள் துணைத் தலைவர், 3 பொலிஸாா், 4 இராணுவத்தினா் உள்பட 11 போ் பலியாகியதாக கொங்கோ அரசு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.