Tuesday 16th of April 2024 05:49:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவால் 100 ஆண்டுகளின் பின் நாளை  மூடப்படுகிறது விக்ரோரியா - நியூ சவுத்வேல்ஸ் எல்லை!

கொரோனாவால் 100 ஆண்டுகளின் பின் நாளை மூடப்படுகிறது விக்ரோரியா - நியூ சவுத்வேல்ஸ் எல்லை!


அவுஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய மாநிலங்களான விக்ரோரியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் இடையிலான எல்லைகள் 100 ஆண்டுகளின் பின்னா் நாளை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

விக்டோரியில் கடந்த 24 மணிநேரங்களில் 127 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனா். குறிப்பாக மெல்போர்னில் அதிகளவு தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா். இதனை அடுத்து அந்த மாநிலத்துடனான தனது எல்லையை மூடும் அறிவிப்பை நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இரண்டு மாநில முதல்வர்களும் இணைந்து நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயின் போது இந்த இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லை மூடப்பட்டது. அதன் பின்னா் 101 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த எல்லைகள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி முதல் எல்லைகள் மூடப்படும் என மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய விக்டோரியா முதல்வா் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தாா்.

இதேவேளை, மூடப்படும் எல்லைகள் எப்போது மீளத் திறக்கப்படும் என்பது குறித்த கால எல்லை எதுவும் தீா்மானிக்கப்படவில்லை என நியூ சவுத்வேல்ஸ் முதல்வா் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறினார்.

இதேவேளை, எல்லை மூடல் உத்தரவை அமுல்படுத்த இராணுவ உதவியை கோரியுள்ளதாக நியூ சவுத்வேல்ஸ் ஆணையாளா் மிக் புல்லர் தெரிவித்தார்.

சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய புல்லர், எல்லையுடான பயணங்களைத் தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு நடைமுறையில் இருக்கும். எல்லைகளின் வழியாக யாரும் நுழைந்துவிடாமல் நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆளில்லா சிறிய ரக கண்காணிப்பு விமானங்கள் மூலமாகவும் எல்லைகள் கண்காணிக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

இரண்டு மாநிலங்களினதும் எல்லைகளில் வசிப்பவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்கு சென்றுவருவதற்காக விசேட அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE