நேற்றைய தினம் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயத்திற்கு மர்ம நபர் ஒருவர் பாக் அணிந்து சென்றிருந்ததோடு மன்னாரில் உள்ள சகல தேவாலயங்களுக்கும் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மன்னாரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்காலையை சொந்த இடமாக கொண்ட நாற்பது வயதை உடைய அலோசியஸ் ஸ் ரீபன்பாஸ் என்பவரே தற்போதைய யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனினும் நேற்றைய தினம் தான் நண்டு கொடுப்பதற்காகவே பேசாலைக்கு சென்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்