Wednesday 17th of April 2024 07:28:46 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 1571 ஆக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 1571 ஆக அதிகரிப்பு!


தமிழ்நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்த வரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஜூலை-6) புதிதாக 3 ஆயிரத்து 827 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 918 உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 61 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1571 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1 ஆயிரத்து 747 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 70 ஆயிரத்து 17 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE